search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. தீர்மானக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
    X

    ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

    தி.மு.க. தீர்மானக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

    • தி.மு.க. தீர்மானக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ரூ.3,233 கோடிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தகள் போட்ட நமது முதல்வருக்கு பாராட்டுகளும், வாழ்த்து களும் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    தி.மு.க. தலைமை தீர்மானக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது. தீர்மானக் குழு தலைவர் கவிஞர் தமிழ்தாசன் தலைமை தாங்கினார். தீர்மானக்குழு செயலாளர்கள் வைத்திய லிங்கம், எம்.எஸ். விஸ்வ நாதன், அக்ரி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பார் இளங்கோ, சத்தியமூர்த்தி, டாக்டர் மாசிலாமணி, நாச்சிமுத்து, ஜெயகுமார், வேங்கடபதி, மிசா ராமநாதன், சேது நாதன், ஆதி சங்கர், ரெஜினால்டு, வெற்றிச் செல்வன், சரவணன், செஞ்சி சிவா, செல்வராஜ், வீர கோபால், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீரமானங்கள் வருமாறு:-

    உயர்நிலை செயல் திட்டகுழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்களின் அடப்படையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் நடக்கும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்வது. தீர்மானக்குழு சார்பாக சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டுவிழா பட்டிமன்றம் , கருத்தரங்கம் அல்லது கவியரங்கம் மிகப்பெரிய அளவில் கழக தலைவர் தலைமையில் நடத்த வேண்டும்.புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் முழுமையாக அனைவரும் ஈடுபட வேண்டும்.

    மேலும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று ரூ.3,233 கோடி களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தகள் போட்ட நமது முதல்வருக்கு இக்கூட்டம் பாராட்டுகளும், வாழ்த்து களும் தெரிவிக்கப்பட்டது.

    தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை உச்சநீதி மன்றம் வரை சென்று வெற்றி பெற்று தந்த தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி ெதரிவிக்கப்பட்டது.

    முடிவில் செஞ்சி சிவா நன்றி கூறினார்.

    Next Story
    ×