search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை-தூத்துக்குடி இடையே தீபாவளி சிறப்பு ெரயில்
    X

    சென்னை-தூத்துக்குடி இடையே தீபாவளி சிறப்பு ெரயில்

    • சென்னை - தூத்துக்குடி இடையே தீபாவளி சிறப்பு ெரயில் இயக்க தெற்கு ெரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
    • சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

    மதுரை

    தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ெரயில் இயக்க தெற்கு ெரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி சென்னை - தூத்துக்குடி சிறப்பு ெரயில் (06001) சென்னை எழும்பூரி ல் இருந்து நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

    மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - சென்னை சிறப்பு ெரயில் (06002) நவம்பர் 11 மற்றும் 13 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ெரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்ப ரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ெரயில் நிலை யங்களில் நின்று செல்லும். இந்த ெரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×