என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம்

- சென்னையில் வருகிற 6-ந் தேதி ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
- 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
வாடிப்பட்டி
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க மாநிலத்தலைவர் சார்லஸ் ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதி அரசாணை வெளியிட வேண்டும். மாத ஊதியத்தை அரசு கருவூலம் மூலமும், தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும்.
அனைத்து சலுகை மற்றும் ஊராட்சி செயலாளருக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் கால முறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். ஓய்வின் போது ஒட்டுமொத்த பணிக்கொ டை ரூ.2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தை கருவூலத்தில் வழங்க வேண்டும்.
தூய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்ச காலமுறை ஊதியமாக ரூ.15 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் முன் கள பணியாளர்களாக பணியாற்றிய தூய்மை காவலர், தூய்மை பணியாளர், மேல்நிலைக் குடிநீர் தொட்டி இயக்குபவர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோருக்கு முதல்வ ரால் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை 2 ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஏப்ரல் 6-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தர்ணா போராட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
