search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுகர்பொருள் சங்க செயற்குழு கூட்டம்
    X

    நுகர்பொருள் சங்க செயற்குழு கூட்டம்

    • நுகர்பொருள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை மாவட்ட நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க ஆண்டு விழா செயற்குழு கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. ஆலோசகர் இளங்கோவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    செயற்குழு கூட்டத்தில் செயலாளர் வினோத்கண்ணா, பொருளாளர் வெங்கட் சுப்பிரமணியன், வக்கீல் தியாகராஜன், பட்டய கணக்காளர் முகமதுகான் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தருக்கான விற்பனை கமிஷன் தொகையை 0.5 முதல் 2 சதவீதம் வரை ஜூன் மாதத்திற்குள் கண்டிப்பாக உயர்த்த வேண்டும், மறைமுக வரி விதிப்புகள் நிலுவையில் உள்ள வணிகருக்கு மற்ற மாநிலங்களை போல் சமாதான திட்டம் கொண்டு வர வேண்டும், தயாரிப்பு நிறுவனங்கள் இரட்டை விலை கொள்கையில் வீடியோகஸ்தருக்கு பொருட்களை சப்ளை செய்யக் கூடாது.

    நுகர்பொருள் மொத்த- சில்லறை விநியோக வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் மட்டுமின்றி உள்நாட்டு பெரிய கார்பரேட் நிறுவனங்களும் ஈடுபட தடை விதிக்க வேண்டும், நடப்பு நிதியாண்டில் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே எந்த ஒரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி. வரி இருக்க வேண்டும், இணக்க வரி 1.5 கோடியாக ஆண்டு விற்பனை உள்ளது. அதனை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும்.

    சேல்ஸ் இன்வாய்ஸ் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருந்தால் ஈ-வே பில் எடுக்க வேண்டி உள்ளது. அதனை மற்ற மாநிலங்க ளைப் போல ரூ.2 லட்சத்துக்கு உயர்த்த வேண்டும். ஈ-வே பில்லை ரத்து செய்ய வேண்டும், புதிய வரி விதிப்பு அல்லது வரி விலக்கு போன்ற அறிவிப்பை இடையில் அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×