search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட தொழிலாளி தற்கொலை
    X

    கட்டிட தொழிலாளி தற்கொலை

    • கட்டிடத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • கட்டிடத்தொழிலாளி, தற்கொலை, Construction worker, suicide,

    திருமங்கலம்

    பேரையூரை சேர்ந்தவர் முருகேசன்(வயது60), கட்டிடத்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்கான அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் இறந்துவிட்டார். இதுபற்றி அவரது மகன் தர்மர் பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×