search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர் பலி
    X

    கல்லூரி மாணவர் பலி

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
    • திருமங்கலம் நகர் போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மகன் யஷ்வந்த் குமார் (வயது 19). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருடன் விரகனூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சூரிய பிரகாஷ் (19), திருப்பு வனத்தைச் சேர்ந்த முருகன் மகன் செந்தூர் பாவா (19) ஆகியோர் படித்து வருகின்றனர்.

    நேற்று கல்லூரி முடிந்து யஷ்வந்த் குமார் தனது நண்பர்கள் சூரிய பிரகாஷ், செந்தூர் பாபா ஆகியோரு டன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்தை அடுத்துள்ள ஆலம்பட்டிக்கு மற்றொரு நண்பரை பார்க்க சென்றனர். மாலையில் 3 பேரும் அங்கிருந்து புறப் பட்டனர்.

    திருமங்கலம் அருகே உள்ள ராஜபாளையம் பிரிவு விலக்கு பகுதியில் வந்தபோது அங்குள்ள வளைவில் உள்ள பாலத்தை கடக்க முயன்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப் பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர்.

    இதில் படுகாயம் அடைந் தவர்களை அங்கிருந்து அவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச் சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யஷ்வந்த் குமார் பரிதாபமாக இறந்தார். சூரிய பிரகாஷ், செந்தூர் பாவா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×