search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கடையில் 10 பவுன் திருடிய கல்லூரி மாணவி கைது
    X

    நகை கடையில் 10 பவுன் திருடிய கல்லூரி மாணவி கைது

    • நகை கடையில் 10 பவுன் திருடிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
    • 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பினார்.

    மதுரை

    மதுரை கீழவாசல், லட்சுமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் கோபி (38). இவர் தெற்கு ஆவணி மூல வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று காலை கோபி கடையில் இருந்தார். அங்கு வந்த ஒரு பெண் நகை வாங்குவது ேபால் பாசாங்கு செய்தார். ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பிய அந்த பெண், அங்கிருந்த 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பினார்.

    இரவில் நகைகளின் இருப்பை சோதனை செய்த போது 10 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து கோபி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். மீனாட்சி அம்மன் கோவில் போலீஸ் உதவி கமிஷனர் முத்துராஜ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நகைக்கடையில் 10 பவுன் நகையை திருடிய பெண்ணின் உருவம் தெரிந்தது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அனுப்பானடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி முத்துமீனா (23)என்பவரை கைது செய்தனர். விளக்குத்தூண் போலீசார் முத்து மீனாவிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×