search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன்-செயின் பறிப்பு
    X

    செல்போன்-செயின் பறிப்பு

    • மதுரையில் செல்போன்-செயின் பறிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருமால்புரம் வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (19). இவர் சம்பவத்தன்று மேலூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3பேர் முகவரி கேட்பது போல் நடித்து லோகேஷ் குமாரின் செல்போனை பறித்து சென்றனர்.

    மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் அவனியாபுரம் பகுதியில் ஒரு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர். 2 சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×