என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
    X

    அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

    • அய்யனார் கோவிலில் 21 பந்தி 61 சேணை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி பெரியகுளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் 21 பந்தி 61 சேணை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மங்கல இசை முழங்க 2 கால யாக பூஜையுடன் கோ பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை 21 பந்தி அய்யனார் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×