search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் படித்து பொதுத் தேர்வில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    மாணவிக்கு பரிசு வழங்கியபோது எடுத்த படம்.

    அரசு பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • அரசு பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • பரிசு தொகை வழங்கி பாராட்டினர்.

    மேலூர்

    மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் சார்பாக மேலூர் தாலுகா அரசு பள்ளியில் படித்த 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அரசு பொதுத் தேர்வு எழுதி மேலூர் தாலுகா அளவில் முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் வளாகத்தில் நடைபெற்றது. 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர் வில் அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகள் நிரஞ்சனா மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 487 மதிப்பெண் பெற்று முதலி டம் பெற்றார். அவருக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகள் சாருமதி மேலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று 478 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகள் பிரிய தர்ஷினி தனியாமங் கலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் பயின்று 473 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கினர். 12-ம் வகுப்பு பொதுத் தேர் வில் வெள்ளலூர் கிராமத் தை சேர்ந்த சேதுராஜன் மகள் முத்து மீனாட்சி மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 558 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 25,000 பரிசு தொகையை வழங்கி னர்.

    கருங்காலக்குடியை சேர்ந்த காதர் பாட்சா மகன் முகமது பாரூக் கருங்காலக் குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பயின்று 557 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த திருப் பதி மகள் மகாலட்சுமி உறங் கான்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பயின்று 556 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கி பாராட்டி னர்.

    இந்த நிகழ்ச்சியில் டை மண்ட் ஜூப்லி கிளப் தலை வர் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேச பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவி, சேது பாண்டி, மகாராஜன், இப்ரா ஹிம் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×