search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து
    X

    தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

    பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து

    • பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பின்னர் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப் பட்டு தீ அணைக்கப்பட்டது.

    இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினர் கடை உரிமை யாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கி சென்ற னர். பின்னர் அந்த கட்டிடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி குழுவினர் 3 நாட்களுக்குள் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என நோட்டீசு வழங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அதே கடையில் இருந்து திடீரென குபுகுபுவென கரும்புகை வெளிவந்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையின ருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வினோத் குமார் தலைமையில் 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    மேலும் கடையின் வெளியே "விரைவில் ஆரம்பம்" என போர்டு வைக்கப்பட்டிருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெற்கு வாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார்.

    தீ விபத்து தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணை யாளர் ரமேஷ் பாபு கூறுகை யில், கடந்த 5 நாட்களுக்கு முன்பே கட்டிடத்தை இடிக்க முறை யாக நாங்கள் நோட்டீசு கொடுத்துள்ளோம் என்றார்.மின்வாரிய உதவி ஆணை யர், தீப்பிடித்த அன்றே மின்சார சப்ளை துண்டிக்கப் பட்டு விட்டதாக கூறினார்.

    தீயை முழுமையாக அணைத்து விட்டதாக தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்து உள்ளதாக அருகில் உள்ள கடைக்கா ரர்கள் கூறினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×