search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்-வாலிபர் தற்கொலை
    X

    இளம்பெண்-வாலிபர் தற்கொலை

    • இளம்பெண்-வாலிபர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    இஸ்மாயில்புரம் 6-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி (28). இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோச்சடை கலை சம்பளக்காரர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×