search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி  கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை
    X

    மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை

    • மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • முக்கிய சாலைகளில் தார் சாலைகள் அமைக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் ரவி பேசுகையில், எனது வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. ரூ. 1 லட்சத்து 20 மதிப்பிலான வேலை நடந்து இருக்கிறது.

    அதற்கு பணம் இன்னும் தரவில்லை. மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட்டதை தவிர வேறு வேலை நடக்கவில்லை. 82-83 வார்டுகள் இணைப்பு பாதையில் மின்விளக்குகள் 6 மாதமாக எரியவில்லை என்றார்.

    85- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முத்துமாரி ஜெயக்குமார் பேசுகையில், எனது வார்டில் வணிகர் வளாகம் அமைக்க வேண்டும். பேவர் பிளாக் சாலை மேடு பள்ளமாக இருக்கிறது.

    சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சாலை அமைக்க வேண்டும். மேலும் முக்கிய சாலைகளில் தார் சாலைகள் அமைக்க வேண்டும். இதற்கு முன்பு எனது வார்டில் பணியாற்றிய உதவி பொறியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

    அவர்கள் நன்றாக பணியாற்றினார்கள். எனவே மீண்டும் அவர்களை எனது வார்டுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

    Next Story
    ×