search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியார்-எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.ம.மு.க. சார்பில் மரியாதை
    X

    பசும்பொன் பாண்டியன்

    பெரியார்-எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.ம.மு.க. சார்பில் மரியாதை

    • பெரியார்-எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.ம.மு.க. சார்பில் மரியாதை வருகிற 24-ந்தேதி நினைவு தினம் செலுத்தப்படுகிறது.
    • அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு வேங்கை மூட நம்பிக்கை எனும் முடைநாற்றத்தை அடியோடு ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினமும், ஏழைகளின் ஒளி விளக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு தினமும் வருகிற 24-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த இருபெரும் தலைவர்களுக்கு வீர வணக்கமும், புகழ் அஞ்சலியும் அ.தி.ம.மு.க. சார்பில் கடைப்பிடிக்கப்படும், அவைத்தலைவர் தாஜுதீன் தலைமையில், துணைப்பொது ச்செயலாளர்கள் நெல்லை முத்துக்குமார், ஈரோடு செந்தில் குமார் ஆகியோர்கள் முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளாராகிய நானும், கழக தலைமை நிலையச் செயலாளர் முரளி ஆகியோர் சென்னையில் உள்ள பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். பின்பு கொளத்தூரில் முதன்மைச் செயலாளர் அகரம் சீனிவாசன் ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படும்,

    பின்னர் பொருளாளர் பி.கே.மாரி ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி சென்னை பூக்கடை பஜாரில் பகல் 12மணிக்கு நடத்தப்படும், அதன் பின்பு சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.ம.மு.க. சார்பில் புகழ் அஞ்சலி செலுத்தப்படும்,

    இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன், அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×