search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
    X

    மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு

    • திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து டி‌. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பார்வதி (வயது 44).

    இவர் ஊர் ஊராக சென்று ஆயுர்வேத மருந்துகளை விற்று வந்தார். அதன்படி சம்பவத்தன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பகுதிகளில் ஆயுர்வேத மருந்துகளை விற்றார்.

    பின்னர் அவர் டி. குன்னத்தூர் செல்வதற்காக செக்கானூரணி அருகே உள்ள கே. புளியங்குளத்தைச் சேர்ந்த சிங்கராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    டி. குன்னத்தூர் அம்மா கோவில் வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பியபோது எதிர்பாராத விதமாக பின்னால் அமர்ந்திருந்த பார்வதி திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பார்வதி கொண்டு செல்ல ப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பார்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி‌. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×