search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த 5 வயது சிறுவன்
    X

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த 5 வயது சிறுவன்

    • விளாங்குடியில் சரியாக மூடாததால் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் 5 வயது சிறுவன் விழுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • காளவாசல்-தேனி பிரதான ரோட்டில் பாதாள சாக்கடை மூடிகள் பல மாதங்களாக சரிவர மூடப்படாமல் கிடக்கின்றன.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைக்காகவும், குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் நன்றாக உள்ள சாலையை தோண்டுவதும், பின்னர் அதனை சரியாக மூடாமல் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் நகர் பகுதியில் 90 சதவீத சாலைகள் குண்டும் குழியு மாக காட்சியளிக்கின்றன.

    தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகள் மேலும் மோசம் அடைந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வரு கின்றனர்.

    விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவன் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-

    மதுரை மாநகராட்சி பகுதியான 1-வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி கணபதி நகர் 2-வது தெரு அருகே உள்ள சக்தி நகர் துளசி வீதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டது.

    பணிகள் முடிந்த பின் வழக்கம்போல் ஊழியர்கள் அதனை சரியாக மூடாமல் அவசரக் கதியில் மண்ணை போட்டுவிட்டு சென்று விட்டனர். இதனை அதிகாரி களும் கண்டு கொள்ள வில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் கடைக்கு சென்றுள்ளான். அப்போது சரியாக மூடப்படாத பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்தான். இதில் அவ னுக்கு காயம் ஏற்பட்டது. சில அடி பள்ளத்தில் சிறு வன் விழுந்ததால் யாருக்கும் உடனடியாக தெரியவில்லை. பள்ளத்தில் விழுந்த சிறுவன் அரை மணி நேரத்திற்கு மேலாக காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளான்.

    இந்த சத்தத்தை ஏதேச்சை யாக கேட்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பள்ளத்தை பார்த்தபோது சிறுவன் காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது. உடனே அப்பகுதி மக்கள் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டான். காயங்களுடன் அதிர்ச்சியு டன் காணப்பட்ட சிறுவனை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மாநக ராட்சி அதிகாரிகள், ஊழி யர்களின் அலட்சியம் கார ணமாக சிறுவன் பள்ளத்தில் விழுந்த சம்பவம் அப்பகுதி யில் காட்டுத்தீ போல் பரவியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விளாங்குடி பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங் களை உடனடியாக சீரமைத்தும் புதிய சாலை அமைக்க வலியுறுத்தியும் திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதி யில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட் டது. போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    காளவாசல்

    இதேபோல் காளவாசல்-தேனி பிரதான ரோட்டில் பாதாள சாக்கடை மூடிகள் பல மாதங்களாக சரிவர மூடப்படாமல் கிடக்கின்றன. இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×