search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுரோட்டில் பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்கள் கைது
    X

    நடுரோட்டில் பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்கள் கைது

    • நடுரோட்டில் பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • வாலிபர்கள் பைக் ரேஸ் ஓட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.

    மதுரை

    தல்லாகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் வாலிபர்கள் சிலர் நடு ரோட்டில் பைக் ரேசில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தல்லாகுளம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆதிகுந்தகண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

    அப்போது அங்கு சில வாலிபர்கள் பைக் ரேஸ் ஓட்டி கொண்டிருந்தது தெரியவந்தது. பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    போலீசார் விசாரணையில், அவர்கள் கிருஷ்ணாபுரம்காலனி சரவணன் மகன் தரனேஷ்(20), வாடிப்பட்டி தாலுகா ஜெமினிப்பட்டி ரமேஷ் மகன்அபினேஷ்(18), வில்லாபுரம் பரமேஸ்வரி அம்மன் தெரு சுரேஷ்பாபு மகன் அச்சுதன்(18) உள்ளிட்ட 8 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×