search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரி உள்பட 4 பேரை மிரட்டி பணம் பறித்த 6 பேர் கைது
    X

    வியாபாரி உள்பட 4 பேரை மிரட்டி பணம் பறித்த 6 பேர் கைது

    • வியாபாரி உள்பட 4 பேரை மிரட்டி பணம் பறித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இது தொடர்பாக பொன் பாண்டியன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை பி.பி.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் அஜித் (வயது 20). இவர் நேதாஜி மெயின் ரோடு மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் அவர் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக அஜித் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முல்லை நகர் திருவள்ளுவர் தெரு ஜெகதீஸ்வரன் என்ற எலி (வயது 25), தரகன் தெரு பெரியசாமி மகன் ஸ்ரீதர் (23), கார்த்திக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை சமயநல்லூர், சத்தியமூர்த்தி நகர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர பாண்டி (29). இவர் நேற்று நள்ளிரவு விளாங்குடி காய்கறி கடை அருகே நடந்து சென்றார். அப்போது கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்ததாக அதே பகுதியை சேர்ந்த விளாங்குடி டேவிட் என்பவரை கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை கே.கே. நகரை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (40). இவர் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் நுழைவு வாயிலில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர் ஓட்டலுக்கு வந்தபோது வழிமறித்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக பொன் பாண்டியன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆலங்குளம் பாரதிபுரம் தெரு வெள்ளைச்சாமி மகன் பாண்டியராஜா (20), கூடல்புதூர் இமயம் நகர் உதயகுமார் மகன் மொட்டை மணி (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×