search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பெண்களிடம் நகை பறிப்பு
    X

    3 பெண்களிடம் நகை பறிப்பு

    • கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே வட கரையில் உள்ள அய்யனார் மற்றும் முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதில் கலந்து கொண்ட ராயபாளையம் கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டி மனைவி கலைவாணி (வயது37), மேலக்கோட்டை சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி ராம லட்சுமி மற்றும் திருமங்க லத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி தவமணி ஆகிய 3 பேரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், அவர்கள் அணிந்திருந்த தங்க செயினை அேபஸ் செய்தனர்.

    3 பேரிடம் மொத்தம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×