search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பேர் தற்கொலை
    X

    3 பேர் தற்கொலை

    • இளம்பெண்-முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை புதூர் அழகர்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மனைவி ஷீலாராணி(வயது35). இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி செய்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்திய டைந்த ஷீலாராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிந்தாமணி அழகர்நகரை சேர்ந்தவர் மகாலிங்கம்(60). இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் விரக்தியடைந்த மகாலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சரோஜா கொடுத்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் காமரா ஜர்புரம் வ.உ.சி. தெருவை சேர்ந்த கணேசன்(30) என்பவரும் குடிப்பழக்கத் தால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×