search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் இழப்பீடு
    X

    விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் இழப்பீடு

    • விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
    • சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தீர்வு காணப்படாத வழக்குகளுக்கு இருதரப்பினரிடமும் பேசி முடித்து வைக்கப்பட்டது.

    அதன்படி சாலை விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் பேசி அந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், மாவட்ட நீதிபதிகள் ராஜவேல், ரஜினி, மக்கள் நீதிமன்ற நீதிபதி தமிழரசன், சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×