search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரி கொலையில் 2 வாலிபர்கள் கைது
    X

    வியாபாரி கொலையில் 2 வாலிபர்கள் கைது

    • அலங்காநல்லூர் வியாபாரி கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்ததாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடி பகுதியில் கீ செயின் தயாரிக்கும் கம்பெனி வைத்து விற்பனை செய்து வருபவர் பாலன் (வயது45). இவர் கடந்த 8-ந் தேதி இரவு வழக்கம்போல் கம்பெனியை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்ற போது எஸ்.வி.டி நகர் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் பாலனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த அலங்கா நல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் மதுரை, கோச்சடையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (21), மற்றும் ஆரப்பாளையம், நாக நகரை சேர்ந்த பொன்முருகன் என்ற ஆதி (19) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.

    பாலனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்த தாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரி வித்துள்ளது.

    தொடர்ந்து இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×