search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற 2 பேர் கைது
    X

    சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற 2 பேர் கைது

    • சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அன்பழகன்.

    மதுரை

    மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அன்பழகன். சம்பவத்தன்று காலை இவர் செக்கானூரணி- திருமங்கலம் ரோட்டில் ரோந்து சென்றார்.

    மாவிலிப்பட்டி சந்திப்பு அருகே 2 பேர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் அன்பழகன் விசாரித்தார். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். 2பேரிடமும் கத்திகள் இருந்தது தெரிய வந்தது.

    எனவே சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும், காவல் நிலையத்துக்கு வாருங்கள் என்று அழைத்தார்.இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அன்பழகனை கத்தியால் குத்த பாய்ந்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து பன்னியான் மேலத்தெருவை சேர்ந்த காசி விஸ்வநாதன் (25), செக்கானூரணி சிவப்பிரகாஷ் (27) ஆகியோரை கைது செய்தார்.

    Next Story
    ×