search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசை சிறப்பு ெரயிலில் 1,140 பேர் பயணம்
    X

    ஆடி அமாவாசை சிறப்பு ெரயிலில் 1,140 பேர் பயணம்

    • ஆடி அமாவாசை சிறப்பு ெரயிலில் 1,140 பேர் பயணம் செய்தனர்.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவ லகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு இன்று (28-ந்தேதி) முன்பதிவு இல்லாத சிறப்பு ெரயில் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட இந்த ெரயில், காலை 9.15 மணிக்கு ராமேசுவரத்தை சென்ற டைந்தது.

    இந்த ரெயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாக சென்றது.

    மதுரை-ராமேசுவரம் ஆடி அமாவாசை சிறப்பு ெரயிலில் மொத்தம் 1,140 பேர் பயணம் செய்தனர். இதன்மூலம் ரூ.72 ஆயிரத்து 700 கட்டணம் வசூலானது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×