search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மதுக்கரை சாய்பாபா கோவிலில் ஜெயந்தி விழா நாளை தொடங்குகிறது
    X

    கோவையில் மதுக்கரை சாய்பாபா கோவிலில் ஜெயந்தி விழா நாளை தொடங்குகிறது

    • காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
    • தொடர்ந்து நாதஸ்வர கச்சேரியும் நடைபெற உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை அருகே மதுக்கரை கடைவீதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.

    வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) சீரடி சாய்பாபாவின் ஜெயந்தி தின விழா இந்த கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    அதனை முன்னிட்டு நேற்று துவாரகா மாயிவாழ் ஆனந்த சாய் டிரஸ்ட் சார்பில் ஏழை பெண்களுக்கு புத்தாடைகளும், மளிகை பொருட்களும் வழங்க ப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு புத்தாடைகளையும், மளிகை பொருட்களையும் வாங்கி சென்றனர்.

    நாளை (புதன்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சாய்பாபாவின் ஜெயந்தி தின விழா நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 6 மணிக்கு பெருந்திரு மஞ்சனமும், 7 மணிக்கு பேரொளி வழிபாடும், 8 மணிக்கு பாபாவின் சத் சரித பாராயணமும், 12 மணிக்கு மத்தியான ஆரத்தியும் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு சத்யநாராயண பூஜையும், 6 மணிக்கு மாலை ஆரத்தியும் நடைபெற உள்ளது

    30-ந் தேதி (வியாழக் கிழமை) காலை 6 மணிக்கு காகட ஆரதியும், 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும், 9 மணிக்கு பாபாவின் சத் சரிதை பாராயணமும், 11:30 மணிக்கு கோமாதா பூஜையும், மதியம் 1 மணிக்கு மத்தியான ஆரதியும், சிங்காரி மேளம் நடைபெற உள்ளது.

    மாலை 4 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாபா ஊர்வலமாக மதுக்கரை கடைவீதி, மதுக்கரை மார்க்கெட், முத்துக்குமரன் பஸ் நிறுத்தம், அன்பு நகர் வழியாக வந்து கோவிலை சென்று அடையும். மாலை 6:30 மணிக்கு நாட்டிய ஆச்சாரியார் பட்டம் பெற்ற சுவாமி கிருஷ்ணா ஆனந்தஜியின் பரதநாட்டியம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நாதஸ்வர கச்சேரியும் நடைபெற உள்ளது.

    இரவு 9 மணிக்கு இரவு ஆரதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. பாபாவின் ஜெயந்தி தின விழாவில் அனைத்து பக்த கோடிகளும் கலந்து கொண்டு பாபாவின் அருள் பெற்று செல்லுமாறு விழாக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

    Next Story
    ×