search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்
    X

    மேட்டுப்பாளையத்தில் விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்

    • ஆறுமுகம் தனது மோட்டார் சைக்கிளில் லிங்காபுரத்தில் இருந்து பாலப்பட்டிக்கு சென்றார்.
    • ஆறுமுகம் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    கோவை,

    கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் இளங்கோவடிகள் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் லிங்காபுரத்தில் இருந்து பாலப்பட்டிக்கு சென்றார். அப்போது திடீரென காட்டுப்பன்றி ரோட்டின் குறுக்கே வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது காட்டுப்பன்றி மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×