search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதல் - கணவன், மனைவி படுகாயம்
    X

    ஏர்வாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதல் - கணவன், மனைவி படுகாயம்

    • நாங்குநேரியில் இருந்து ஏர்வாடிக்கு லோடு ஆட்டோ வந்து கொண்டிருந்தது.
    • லோடு ஆட்டோ திடீர் என மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    நெல்லை அருகே உள்ள பாளையங்கோட்டை, திருமலை தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது48).

    இவர் தனது மனைவி மலையரசியுடன் (42) மோட்டார் சைக்கிளில் ஏர்வாடியில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.

    இதே போல் நாங்குநேரியில் இருந்து ஏர்வாடிக்கு லோடு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. லோடு ஆட்டோவை கருங்குளத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) ஓட்டி வந்தார். ஏர்வாடி அருகே ஆலங்குளம் ரோட்டில் வந்த போது, லோடு ஆட்டோ திடீர் என மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் இசக்கிமுத்தும், அவரது மனைவி மலையரசியும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சை க்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய லோடு ஆட்டோவை ஓட்டி வந்த ரஞ்சித்குமார் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×