என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டடம் அருகே மனைவியை  கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
    X

    குண்டடம் அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

    • செந்தில்குமாா் மனைவியைக் கத்தியால் குத்தியுள்ளாா்.
    • அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜரானாா்.

    குண்டடம் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்துள்ள மரவபாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (வயது 45), கூலி தொழிலாளி. இவரது மனைவி துளசிமணி (42). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், செந்தில்குமாா் அடிக்கடி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே மனைவியுடன் கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி 20ந்தேதி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமாா் மனைவியைக் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த துளசிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இது குறித்து குண்டடம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனா்.இந்த வழக்கானது திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு அளித்தாா்.இதில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜரானாா்.

    Next Story
    ×