search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பேருக்கு ஆயுள் தண்டனை
    X

    2 பேருக்கு ஆயுள் தண்டனை

    • நல்லநாயகபுரம் கிராமத்தில் நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
    • அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வேல். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு டாஸ்மாக் பார் நடத்தி வந்துள்ளார். அப்பொழுது அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ். இவர்கள் இருவருக்கும் முன்விரோம் இருந்தது.இதன் காரணமாக தமிழ்வேல், அம்பேத்கர், கரிகாலன், தமிழ்வேலின் தாயார் தமிழரசி, சகோதரி வேலரசி ஆகியோர் அந்தோணிராஜ் வீட்டிற்கு சென்று வீட்டிற்குள் படுத்திருந்த அவரது தந்தை தனவேலை வெட்டி கொலை செய்துள்ளனர்.இதுகுறித்து செந்துறை காவல் நிலையத்தில் அந்தோணிராஜ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் கைது செய்யபட்டனர்.மேலும் இதுகுறித்த வழக்கு, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கர்ணன், தமிழ்வேல், அம்பேத்கர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் குற்றம் சாட்டபட்ட கரிகாலன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தமிழ்வேலின் தாயார் தமிழரசி, சகோதரி வேலரசி ஆகியோர் நிரபராதி என தீர்ப்பு வழங்கபட்டது குறிப்பிடதக்கது.




    Next Story
    ×