search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில், 2-வது நாளாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X

    கும்பகோணத்தில், 2-வது நாளாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    • சட்டதிருத்த மசோதாக்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
    • கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டதிருத்த மசோதாக்களை மத்திய அரசு உடனடி யாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு, ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்து விட்டு கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு திரண்டனர்.

    பின்னர் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் தலைமை தபால் நிலையம் வந்தடை ந்தனர்.

    ஊர்வலத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஊர்வ லத்தை மூத்த வக்கீல் சுகுமாறன் தொடங்கிவைத்தார்.

    இதில் மூத்த வக்கீல்கள் சக்கரபாணி, வைத்தியநாதன், முன்னாள் சங்க தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராஜசீனிவாசன், சசிகலா, பானுமதி, அனுராதா உள்பட திரளான வக்கீல்கள் கலந்து கொண்டு சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×