search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது- ஆறு.சரவணத்தேவர்
    X

    ஆறு சரவணத் தேவர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது- ஆறு.சரவணத்தேவர்

    • பா.ஜ.க பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், இந்துக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசாவை கண்டித்தும் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காந்தி ஜெயந்தியை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் திமுக தலைமையிலான அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இந்த ஊர்வல அனுமதியை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

    மேலும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறேன்.

    3000 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுஸ்மிருதி நூலை குறிப்பிட்டு,

    இவ்வாறு மிக மோசமாக பேசி உள்ளார்.

    சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும் என்று யாரும் நிர்பந்தம் செய்யாத போது எதற்காக இதை பேச வேண்டும்?

    மற்ற மதத்தினரின் நூல்களில் உள்ள குறைகளை பற்றி ஆ.ராசா பேசுவாரா?

    தொடர்ச்சியாக இந்து மதத்தை இழிவு படுத்துவோர், மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

    Next Story
    ×