என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவுபதி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
    X

    அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.

    திரவுபதி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை

    • பெண்கள் குத்து விளக்கு வைத்து, பூ சாற்றி விளக்கு பூஜை செய்தனர்.
    • திரவுபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன், கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பெண்கள் வரிசையாக அமர்ந்து குத்து விளக்கு வைத்து, பூ சாற்றி விளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×