என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருப்பூர் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
- டால்மியா போர்டு பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற, ரோட்டை கடக்க முயன்றார்.
- அப்போது சேலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி சென்ற அரசு பஸ், வெங்கடாசலம் மீது மோதியது.
சேலம்:
சேலம் கருப்பூர் வெள்ளக்கல்பட்டி தாழம்பூ நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). இவர் கடந்த 20-ந் தேதி மாலை சுமார் 4.30 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக டால்மியா போர்டு பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற, ரோட்டை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி சென்ற அரசு பஸ், வெங்கடாசலம் மீது மோதியது.
இதில் தூக்கி விசப்பட்ட அவர், படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெங்கடாசலத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் இறந்து விட்டார். இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






