என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அருகே கார் மோதி தொழிலாளி பலி
- தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார்ைசக்கிள் மீது மோதியது.
- இதில் அருள்செல்வன் பலத்த காயமடைந்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் -கோவை புறவழிச்சாலை எஸ்.எஸ்.எம் கல்லூரி எதிரில் ஓட்டல் வைத்து தொழில் செய்து வந்தவர் அருள்செல்வன், (வயது 48). இவர் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் ஆனங்கூர் சாலை காவடியான்காடு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார்ைசக்கிள் மீது மோதியது. இதில் அருள்செல்வன் பலத்த காயமடைந்தார். இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அருள்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் கார் டிரைவர் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த ஸ்ரீகாந்த், (29) என்பவரை கைது செய்தனர்.
Next Story






