என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கூலி தொழிலாளி பலி
    X

    மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கூலி தொழிலாளி பலி

    • பொம்மம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் புத்தூர் அருந்ததியர் காலனி அருகே சென்று கொண்டிருந்தனர்.
    • அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே உள்ள கணபதிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 58). கூலித்தொழிலாளி.

    இவரும் இவரது நண்பரும் நேற்று வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் புத்தூர் அருந்ததியர் காலனி அருகே சென்று கொண்டி ருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பின்னால் அமர்ந்தி ருந்த ராமச்சந்திரன் கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்த வர்கள் ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் உயிரிழந்தார்.

    இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×