என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட் மீது கார் மோதி கூலித்தொழிலாளி பலி
    X

    மொபட் மீது கார் மோதி கூலித்தொழிலாளி பலி

    • கடந்த 4-ந் தேதி தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • வேலகவுண்டம்பட்டியில் இருந்து பெரியமணலி நோக்கி அதிவேகமாக வந்த கார், செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கோட்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெரிய மணலி பகுதியில் கோட்டம்பட்டி பிரிவு சாலையில் வலது புறமாக திரும்பியபோது வேலகவுண்டம்பட்டியில் இருந்து பெரியமணலி நோக்கி அதிவேகமாக வந்த கார், செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இதில் அவர் படுகாயம்

    அடைந்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்தார். அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று செல்வ ராஜ் உயிரிழந்தார். விபத்து குறித்து வேலக

    வுண்டம்பட்டி போலீசில்

    புகார் செய்தனர். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான நாமக்கல், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன் (49) என்பவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×