search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலஞ்சுழி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    வலஞ்சுழி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

    • மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
    • 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மேற்கு காவல் நிலைய காவலர்கள் குடியிருப்பில் உள்ள வலஞ்சுழி ராஜகணபதி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதற்காக நேற்று (2-ந் தேதி) முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று (3-ந் தேதி) 2-ம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து, விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் ஏராளமான போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×