என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அன்னூரில் இன்று ஸ்ரீராயபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது
- இந்தியா உலக கோப்பையை வெல்ல சிறப்பு பூஜை
மேட்டுப்பாளையம்,
அன்னூர் அருகே செம்மாணி செட்டிபாளையம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராயர் பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலை பராமரித்து பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. தற்போது கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது.
கடந்த 18-ந் தேதி மாலை 3 மணிக்கு பெருமாள் ஆஞ்சநேயர் நூதன விக்ரகம், பட்டினப்பிரவேசம், தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை 4 மணி முதல் 9 மணி வரை ஆசார்ய வர்ணம், அங்குரா ர்ப்பனம், மருத்சங்கரணம் ஹோமம், திவ்யபிரபந்த சேவாகாலம் சாற்றுமுறையும் நடந்தது. தொடர்ந்து இன்று காலை யாக சாலைகள் சிறப்பு கேள்விகள் அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.
அதன்பின் காலை 8.30 மணி முதல் 9:30 மணிக்குள் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் காட்டம்பட்டி, கணேஷ்புரம், குன்னத்தூர், செட்டிபாளையம், அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகம் முடிந்து இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டி கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை காரமடை ஸ்ரீ வேதவ்யாச சுதர்சன பட்டர் சுவாமிகள் நடத்தி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்