என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டிய குமரி எம்.பி. விஜய் வசந்த்
    X

    மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டிய குமரி எம்.பி. விஜய் வசந்த்

    • தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
    • ஓயாசீஸ் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு 54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.

    ஓயாசீஸ் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதி 54.40 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டினார் குமரி எம்பி விஜய்வசந்த்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் செட்டிகுளம் அரசு தொடக்க பள்ளியில் அமைந்துள்ள ஓயாசீஸ் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு 54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டது அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தார்

    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மாவட்ட கல்விதுறை அதிகாரி பாலதண்டாயுதபாணி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், வட்டாரத் தலைவர் அசோக்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வார்டு தலைவர் வர்கீஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சகாய பிரவீன், காங்கிரஸ் விளையாட்டு துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×