கீழப்பாவூர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தி விழா ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர்.
கிருஷ்ணர் வேடத்தில் குழந்தைகள்.
கிருஷ்ணர் வேடத்தில் குழந்தைகள்.
Published on

தென்காசி:

கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி அகண்ட நாம ஜெபம், சாயரக்சை, சகஸ்கர நாம அர்ச்சனை, சுவாமி திருவீதி உலா, நாம கீர்த்தனம், கும்பஜெபம், அபிஷேகம், கிருஷ்ண ஜனனம், தீபாராதனை ஆகியன நடைபெற்றது.

சனிக்கிழமை காலை உறியடி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தி விழா ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com