என் மலர்
உள்ளூர் செய்திகள்

11 ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு
- கரூரில் 11 ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு
- நகை பட்டறை தொழிலாளி கைது
கரூர், செப். 22-
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குரு தினேஷ் (வயது38). கரூர், ஜவஹர் பஜாரில் வெள்ளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், கரூர் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த நகைப் பட்டறை தொழிலாளி கார்த்திக்கேயன் (44) என்பவர் சம்பவத்தன்று கடைக்கு வந்து கூட்டத்தை பயன்படுத்தி 11 ஜோடி கொலுசுகளை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தவர், எடுத்துச் சென்று விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ரூ. 8 ஆயிரத்து 750 மதிப்புள்ள 11 ஜோடி வெள்ளி கொலுசுகள் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திக்கேயனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து போலீசார் கொலுசுகளை மீட்டனர்.
Next Story






