என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரைவட்ட பஸ் ஸ்டாப் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
கரூர் கிருஷ்ணராயபுரம், மாயனூர் பகுதிகளில்அரைவட்ட பஸ் ஸ்டாப் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
கரூர்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நான்காவது வார்டு கடைவீதி பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துகள் நடுரோட்டில் நின்று செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கிருஷ்ணராய புரம் தாலுக்கா அலுவலகம் முதல் பேருந்து நிறுத்தம், அங்காளம்மன் கோவில் வரை பிளாக்ஸ்பாட் என அறிவித்து நெடுஞ்சாலை துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டு, சர்வீஸ் ரோடு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த இந்த சர்வீஸ் ரோடு, பேருந்து நிறுத்த முதல் வலையர்பாளையம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் தேசிய மகாதானபுரத்தில் அமைத்துள்ளது போல் கிருஷ்ணராயபுரம் மற்றும் மாயனூர் பகுதிகளில் அரை வட்ட வடிவிலான பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்
Next Story






