என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
- கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
- 46 மது பாட்டில்களை பறிமுதல்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் அரசு மதுபான கடைக்கு பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு ஒருவர் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 56) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






