என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடை செய்யப்பட்ட குட்கா விற்றவர் மீது வழக்கு
- குந்தாணி பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பூர்ணம் (வயது 73)
- வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணி பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு திடீர் ரெய்டு நடத்தி, பல்வேறு வகையான புகையிலை வகைகளை கைப்பற்றி, பறிமுதல் செய்தனர். பெட்டிக்கடை வியாபாரியான குந்தாணி பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பூர்ணம் (வயது 73) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story






