என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
- புகழூர் தாசில்தார் அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் முருகையன் முடிவுரை ஆற்றினார்
வேலாயுதம்பாளையம்
சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நடக்கும் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் சி.பி.எஸ் இயக்க தலைமையை அழைத்து பேச வலியுறுத்தியும், புகழூர், மண்மங்கலம் வட்ட கிளை சார்பாக புகழூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆதரவு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைத் தலைவர் உமா மகேஸ்வரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணு, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயலாளர் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக அரசு புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் முருகையன் முடிவுரை ஆற்றினார்.வட்ட பொருளாளர் இளவரசி நன்றி கூறினார்.






