என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியம்மை நோய் தடுப்பு ஊசி முகாம்
    X

    பெரியம்மை நோய் தடுப்பு ஊசி முகாம்

    • குளத்துப்பாளையம், காளிபாளையம் பகுதிகளில் கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம்
    • கால்நடைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல் கால்நடை மருத்துவமனை சார்பில் குளத்துப்பாளையம், காளிபாளையம் பகுதிகளில் கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மண்டல உதவி இயக்குனர் அல்லி அருள்குமாரி முன்னிலை வைத்தார். நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் உஷா தலைமையில் உதவியாளர் மாலதி கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட சுமார் 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போட்டனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால்நடைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×