search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1500 ஆடுகளுக்கு தடுப்பூசி
    X

    1500 ஆடுகளுக்கு தடுப்பூசி

    • புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் 1500 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
    • ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி தலைமை வகித்து ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் தளவாபாளையம் கால்நடை மருத்துவர் டாக்டர் கோபிநாத் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.

    Next Story
    ×