என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்தடையால் வியாபாரிகள் பொதுமக்கள் அவதி
    X

    மின்தடையால் வியாபாரிகள் பொதுமக்கள் அவதி

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் கனமழை மின்தடையால் வியாபாரிகள் பொதுமக்கள் அவதி
    • இருப்பினும் சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் துணைமின் நிலையத்திலிருந்து வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, தவிட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மின் பாதையில் நேற்று மாலை பெய்து கொண்டிருந்த கனமழையின் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. என்னடியில் கனமழையின் காரணமாக வேலாயுதம்பாளையம் மின் பாதையில் புகழி மண்டபம் அருகில் இன்சுலேட்டர் பழுதாகிவிட்டது. இதன் காரணமாக வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், சேமங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. இதனால்

    கடைகாரர்கள், வியாபாரிகள்

    மின்சாரம் இல்லாததால் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    தொடர்ந்து மின் பாதையில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவிக்கையில் விரைவில் மின் பாதையில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி மின் சப்ளை கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

    அதே போல் கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், கட்டிப்பாளையம், நத்தமேடுப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், கடம்பங்குறிச்சி, நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், மூலிமங்கலம், கொங்கு நகர், பழமாபுரம், குட்டக்கடை, புன்னம் சத்திரம், உப்பு பாளையம், குப்பம், அத்திப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலையும், மீண்டும் மாலையும் மழை பெய்தது.

    இந்நிலையில் பொதுமக்களை தொடர்ந்து வாட்டி வரும் வெயிலின் தாக்கம் காரணமாக வெப்ப சீதோசன நிலை இருந்து வந்தது.காலை மற்றும் மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் வெப்ப சீதோஷ்ண நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக பணபயிர்கள் வாடிய நிலையில் இருந்தது.நேற்று காலை மற்றும் மாலை நேரத்தில் பெய்த மழையால் வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர்.

    Next Story
    ×