என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாத்திரை தின்ற பெண் சாவு
    X

    மாத்திரை தின்ற பெண் சாவு

    • கரூரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்ற பெண் உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மண்மங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி புனிதா (வயது 35). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் புனிதா சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் புனிதாவை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி புனிதா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×