search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி விழுந்து வாலிபர் சாவு
    X

    மயங்கி விழுந்து வாலிபர் சாவு

    • மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி அருகே உள்ள கே.பி.தாளப்பட்டியை சேர்ந்தவர் பிரசாத்(வயது 32). இவர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி வினோதினி (27) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரசாத் வழக்கம்போல் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அங்கு பணிபுரிந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரசாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×